ஆசியான் உச்சநிலை மாநாடு கூட்டத்திற்கு வருகை புரிந்த புருணை சுல்தான் சுல்தான் ஹஸ்னால் போல்க்கியா ஐ.ஜே. என்.னை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார் என புருணை பிரதமர் அலுவலகம் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளனர்.
சோர்வு காரணமாக புருணை சுல்தான் IJN எனும் தேசிய இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஐந்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.









