“இந்த வாழ்வில் கிடைத்திருக்கும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டு உங்கள் வாழ்க்கையைப் பயனுள்ளதாகச் செய்யுங்கள்.”
தினந்தோறும் யாசிக்கும் ஒர் ஏழையின் குடிசைக்கு அடியில் ஒரு புதையில் இருக்கிறது. அது அவனுக்குத் தெரியாது. ஆஹா அந்த யாசகனிடம் சொல்லவா வேண்டாமா? விஷயம் என்னவென்றால் அந்த யாசகன் வேறொருவரும் இல்லை. அது நீங்கள்தான். “நாங்கள் யாசகர் இல்லை.” என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், நீங்கள் யாசிக்கிறீர்கள் அல்லவா? ஒவ்வொரு நாளும் உங்கள் நண்பர்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் யாசிக்கிறீர்கள். உங்கள் நண்பர்களிடம் அனுதாபத்திற்காக சினேகத்திற்காக யாசிக்கிறீர்கள், உங்கள் மனைவியிடம், உங்கள் கணவரிடம் உங்கள் குழந்தைகளிடம் அன்புக்காக அரவணைப்பிற்காக யாசிக்கிறீர்கள். இவ்வாறு யாசிக்காதவர் ஒருவரும் இல்லை இவ்வுலகத்தில்.
நாம் யாசகர்கள் ஆனால், எங்கு எவரிடம் உண்மையாக யாசிக்க வேண்டுமென நாம் தெரிந்திருக்கவில்லை. நமக்கும் ஒரு குடிசை இருக்கிறது. அந்தக் குடிசையின் கீழே ஒரு புதையில் இருக்கிறது. இந்த வாழ்க்கையில் உண்மையிலேயே உங்கள் குடிசையின் கீழே அதாவது, உங்கள் உள்ளேயே ஒரு புதையில் இருக்கிறது. நீங்களும் அந்த ஆனந்தம் என்ற புதையலைத் தேடி அறிந்துகொள்ளுங்கள். அந்த சாந்தி என்ற புதையலைத் தேடி அறிந்துகொள்ளுங்கள். எந்தளவிற்க்கு உங்கள் உள்ளே தோண்டுகிறீர்களோ அந்தளவிற்கு ஆனந்தம், சாந்தி, திருப்தி என்னும் பொன்னும் பொருளும் கிடைக்கும். நீங்களும் செல்வந்தர் ஆவீர்கள். அப்போது நீங்கள் வெளியில் யாரிடமும் யாசிக்கத் தேவை இருக்காது.
நாம் இவ்வுலகத்திற்கு வெறுங்கையுடந்தான் வந்தோம். வெறுங்கையோடுதான் திரும்ப வேண்டி இருக்கிறது எனக் கூறுவார்கள். அனைவரும் வெறுங்கையுடன் வந்தது உண்மைதான். ஆனால், நாம் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவசியமில்லை. ஏதாவது எடுத்துச் செல்லலாம். எனவே, சற்று கவனித்துப்பாருங்கள். இந்த வாழ்க்கையில் நீங்கள் ஆனந்தமடைவதற்காக அனைத்தும் செய்கிறீர்கள். ஆனால், ஆனந்தத்தை அடைய முடியவில்லை. ஏனென்றால், உண்மையான ஆனந்தத்தை அடையவதற்கான வழி உங்கள் உள்ளேயே இருக்கின்றது. ஆகவே, உங்கள் வாழ்க்கையை ஆனந்தத்தினால் நிரப்பக்கூடிய ஒரு பொருளைக் எடுத்துச்செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை சாந்தியால் நிரப்பக்கூடிய ஒரு பொருளை எடுத்துச் செல்லுங்கள். அவைதான் பேரின்பத்தின் பொக்கிஷமாகும்.
கடந்த 60 வருடங்களாக திரு பிரேம் ராவத் அவர்கள் தனி ஒரு மனிதனின் உள் அமைதியைப் பற்றி உலகமுழுவதும் உறையாற்றி வருகிறார். நாடாளுமன்றம் முதல் சிறைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், தொலைக்காட்சிஸ்டூடியோக்கள் வரை பல்வேறு இடங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
மேலும் தெரிந்துகொள்ள, கீழே உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்:





















