அரிசி வழங்கல் குறைபாடு – உடனடி கண்காணிப்பு அவசியம் : தகவல் தொடர்பு அமைச்சர்

TAWAU ,

சாரா திட்டத்தின் கீழ் அரிசிக்கு அதிக தேவை இருப்பதால் சில இடங்களில், குறிப்பாக Tawau மாவட்ட சூப்பர் மார்க்கெட்களில், அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் அரிசி விநியோகத்தை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் என பரிந்துரைத்துள்ளார். “அரிசி, மக்கள் அடிப்படை தேவை என்பதால் அதற்கான வழங்கலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்,” என அவர் மேலும் வலியுறுத்தினார்.

கடைகளில் கொள்முதல் செய்யப்படும் அளவை கண்காணிக்கும் விரிவான முறையை அறிமுகப்படுத்தவும், விநியோகிக்கப்படும் அளவு குறைவாக உள்ள பகுதிகளில் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர் பரிந்துரைத்தார்.

சாரா திட்டத்தில் தற்போது 7,300-க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்று வருவதாகவும், ஆரம்பத்தில் இருந்த 2,000 இடங்களை விட இது பெரிதாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், மை-காட் தவறாக பயன்படுத்தப்படும் சம்பவங்கள் தொடர்பான புகார்களை அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும், அவசர புகார் எண்கள் (MyKasih hotline) அறிமுகப்படுத்தப்பட வேண்டியது அவசியம் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

சாரா திட்டத்தின் செயல்பாடுகளை Tawau மாவட்டத்தில் நேரில் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here