சீனா நிவாரண உதவி
பேரிடரில் சிக்கியுள்ள நேபாளத்துக்கு சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியா ஏற்கனவே நிவாரண பொருட்கள். மீட்புக்குழு நிபுணர்கள் என பல்வேறு வகைகளில் உதவியுள்ளது. இதைப்போல சீன அரசு 2 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.19 கோடி) உதவியாக அறிவித்தது. இதைப்போல அந்த நாட்டு செஞ்சிலுவை சங்கமும் 2 லட்சம் டாலர்களை (சுமார் ரூ.2 கோடி) அறிவித்தது.
இந்த நிவாரண உதவியை நேபாளத்துக்கான சீன தூதர் ஜாங் மாமிங் நேற்று நேபாள நிதி மந்திரி ஸ்வர்னிம் வாக்லேயிடம் நேரில் ஒப்படைத்தார். மேலும், ‘இந்த பேரிடரில் நேபாளம் தனித்து விடப்படவில்லை; சீனா எப்போதும் நேபாளத்துடன் இருக்கிறது’ என்று சீன அதிபர் ஜின்பிங் சார்பில் வாக்லேயிடம் தெரிவித்தார்.
உலகளாவிய காலநிலை மாற்றம்
இந்தநிலையில், நேபாளம் பெருவெள்ள பாதிப்பிற்கு இழப்பீடு கொடுக்க வேண்டியது வல்லரசு நாடுகளின் தார்மீகப் பொறுப்பு. அவர்களால் ஏற்படும் உலகளாவிய காலநிலை மாற்றத்தால் நேபாள பனிப்பாறைகள் உருகுவதும், பெருவெள்ளம் ஏற்படுவதும் தொடர்கிறது. இனி பிற நாடுகளிடம் ‘நிதியுதவி’ கேட்பதற்குப் பதிலாக, ‘நீதி மற்றும் இழப்பீடு’ கோருவதே நேபாளத்தின் முதன்மைக் கொள்கையாக இருக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷிசிர் கனால் கூறியுள்ளார்.