சிலம்பம் பட்டயத் தேர்வு
எம். அன்பா
காஜாங், மார்ச் 5-
தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பக்கலை விளையாட்டுத்துறை வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நோக்கில் மார்ச் 3ஆம் தேதி ஜாலான் ரெக்கோ சிலம்பம் கிளப் ஏற்பாட்டில் தமிழன் வீர தற்காப்புக் கலை சிலம்பம் பட்டயத் தேர்வு நிகழ்ச்சி காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி...
நகராண்மைக்கழக உறுப்பினர் சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி
பத்தாங் காலி பி.கே.பிரதர்ஸ் ஏற்பாட்டில் உலு சிலாங்கூர் நகராண்மைக்கழக உறுப்பினர் சுழற்கிண்ண ஃபுட்சால் போட்டி சிறப்பாக நடைபெற்றது. நகராண்மைக்கழக உறுப்பினர் பி. ராஜேஷ்ராவ் பெயரைக் கொண்ட இப்போட்டியில் மொத்தம் 16 குழுக்கள் பங்கேற்றன.
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி ராசா தாம்பாஹான் ஃபுட்சால் மையத்தில் இப்போட்டி நடைபெற்றது. போட்டியின் முதல் பரிசை...
ஆர்திஜி திட்டத்தில் இருந்து பண்டேலேலா – டபிதா நீக்கம்
ஆர்திஜி எனப்படும் தங்கப் பதக்கத்தைவெல்வதற்கான திட்டத்தில் இருந்து தேசிய முக்குளிப்பு வீராங்கனைகளான டத்தோ பண்டேலேலா ரெனுங், நூர் டபிதா ஆகிய இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை நேற்று நடைபெற்ற ஙெ்ய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அத்திட்டத்தின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் டத்தோ ஸ்டுவர்ட் ராமலிங்கம் உறுதிப்படுத்தினார்.முன்னதாக அவ்விருவரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறுவதில் தோல்விகண்டிருந்தனர். இந்நிலையில் ஆர்திஜி திட்டத்தில் இருந்து அவ்விருவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
FA கிண்ணம்: காலிறுதிக்கு முன்னேறிய மான்செஸ்டர் யுனைடெட்
லண்டன்:
மான்செஸ்டர் யுனைடெட் புதன்கிழமை பின்னிரவு நடந்த FA கிண்ண ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் குழுவை எதிர்த்து விளையாடியது.
அந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் யுனைடெட் வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் கசிமரோ யுனைடெட்டிற்கு கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்த தற்காப்பு...
5 பதக்கங்கள் வென்று ரிசாலினி – யோகிஷா சாதனை
கே. ஆர். மூர்த்தி
கூலிம், பிப். 29-
கெடா மாநில கராத்தே கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் யோகிஷா, ரிசாலினி ஆகிய இருவரும் தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்று மாநில கராத்தே கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
மெர்சிங் மாவட்ட கராத்தே கழகம், ஜோகூர் ஷோரின்- ரியு செய்புகான் கராத்தே கழகத்தின் ஆதரவோடு இவ்வாண்டுக்கான முதலாவது கராத்தே பொதுப்போட்டியை நடத்தியது.
இப்போட்டி ஜோகூர் மெர்சிங்கில் அமைந்துள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள பெர்மாத்தா மார்ஜன் மண்டபத்தில் நடைபெற்றது.
மெர்சிங் மாவட்ட கராத்தே கழகத்தின் தலைவரும் தலைமை பயிற்றுநருமான மாஸ்டர் லோகேன் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவர் வி.விக்ரம சூரியா தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியில் சிலாங்கூர், கோலாலம்பூர், கெடா, மலாக்கா, ஜோகூர் ஆகிய ஐந்து மாநிலங்களிலிருந்து 180 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
கெடா மாநில கராத்தே...
இளம் இந்திய கால்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கும் மிஃபா
ரெ. மாலினி
மலாக்கா, பிப். 28-
இளம் இந்தியக் கால்பந்து விளையாட்டாளர்களின் திறமைகளை அடையாளம் காட்டும் வகையில் மலேசிய இந்திய கால்பந்து சங்கத்தின் (மிஃபா) ஏற்பாட்டில் 2ஆவது முறையாக 14 வயதிற்குட்பட்ட தேசிய அளவிலான கால்பந்து விளையாட்டுப் போட்டி மலாக்கா, குருபோங் விஸ்மா மாபா பாடாங் 10இல் இரு தினங்களுக்கு விமரிசையாக நடைபெற்றது.
நாடு...
இங்கிலாந்து லீக் கிண்ணத்தை வாகை சூடியது லிவர்புல்
வார இறுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் லிவர்புல் அணி வாகை சூடியது. இந்த இறுதி ஆட்டத்தில் அவ்வணி செல்சி அணியை எதிர்கொண்டு விளையாடியது.
வெம்பளி அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்புல் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. முதல்...
நாலுபேருக்குப் பயனுள்ளவர்களாக ...
கவின்மலர்
ஜார்ஜ்டவுன், பிப். 27-
வாழும் காலத்தில் நாலுபேருக்குப் பயனுள்ளவர்களாக வாழ்வோம் என்று மலேசிய குற்றத்தடுப்பு அறவாரிய உச்சமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ கா. புலவேந்திரன் நினைவுறுத்தினார்.
பினாங்கு சத்ரியன் சொப்பர்ஸ் அதிவேக மோட்டார் சைக்கிள் சங்க ஆண்டுக் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் பேசிய அவர், கடந்த...
கரபாவ் கிண்ணத்தை வென்றது லிவர்பூல்
லண்டன்:
செல்சி அணிக்கு எதிரான லீக் கிண்ணத்தின் இறுதியாட்டத்தில் லிவர்பூல் குழு வாகை சூடியது.
பரபரப்பாக சென்ற அந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் தடுமாறின. 90 நிமிடங்கள் கடந்த பிறகு, ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
ஆட்டத்தின் 118வது நிமிடத்தில் லிவர்பூல் அணித் தலைவர் வேன் டைக்...
சுங்கைபட்டாணியில் கோல் காவலர் பயிற்சிப் பட்டறை
(கே.ஆர். மூர்த்தி)
அலோஸ்டார், பிப். 24-
சுங்கைபட்டாணியில் கோல்காவலர் பயிற்சிப் பட்டறையில் 45 பேர் பங்கு பெற்றதாக ஏற்பாட்டுக்குழு பொறுப்பாளர்களில் ஒருவரான பயிற்றுநர் கோ. லலிதா அம்பிகை தெரிவித்தார்.
நேற்றுக் காலை 8.00 மணி முதல் காலை 10.30 மணி வரை சுங்கைபட்டாணி நகராண்மைக் கழகத்திற்குச் சொந்தமான மைதானத்தில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடந்தேறியது....