ரியோ டெ ஜெனேய்ரோ
விளையாட்டுத் துப்பாக்கியை வைத்து 37 பயணிகள் பயணம் செய்த பேருந்தை தடுத்தி நிறுத்தியுள்ளான் அந்த ஆடவன்.
தான் அந்த பேருந்தை எறிக்கப்போவதாக மிரட்டியுள்ளான். தான் ஒரு இராணுவ அதிகாரி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த ஆடவனிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்ற போது, பேருந்தில் இருந்த பெண்ணைப் பார்த்து இரண்டு முறை சுட்டுள்ளான்.
அதனை எதிர்பார்க்காத போலீசார் அந்த ஆடவனை சுட நேர்ந்ததாக போலீஸ் தரப்பு அறிவித்துள்ளது. அந்த ஆடவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் போல காட்சியளிப்பதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளனர்.