Home மலேசியா இன உணர்வை எழுப்பாதீர்! ஹமிட் படோர்

இன உணர்வை எழுப்பாதீர்! ஹமிட் படோர்

கோலாலம்பூர்

அமைதிப் பேரணி உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் இன உணர்வைத் தூண்டும் விவகாரங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர் கேட்டுக் கொண்டார்.

பல்லின மக்கள், பல சமயங்களின் பரஸ்பர மரியாதையையும் சகிப்புத் தன்மையையும் பாதுகாக்க வேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.

ஸாக்கிரின் மீதான புலனாய்வு முடிவடைந்து, அறிக்கை சட்டத் துறை அலுவலகத்துக்கு அனுப்பப்படும். அது சம்பந்தமாக 515 புகார்கள் பெறப்பட்டிருப்பதாக ஹமிட் படோர் தெரிவித்தார்.

நாடு முழுமைக்கும் ஸாக்கிர் சமய உரை நிகழ்த்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக் கொடியை தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக 68 புகார்கள் பெறப்பட்டன, 19 ஆவணங்கள் திறக்கப்பட்டன.

ஜாவி-அரேபிய சித்திர எழுத்து சம்பந்தமாக 24 புகார்களைப் பெற்றிருப்பதாகவும் டோங் ஸோங் அமைப்பின் தலைவர், செயலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஹமிட் படோர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version