Home மலேசியா லாதார் நெடுஞ்சாலை விபத்தில் தந்தையும் 2 வயது மகனும் தீயில் கருகி மரணம்.

லாதார் நெடுஞ்சாலை விபத்தில் தந்தையும் 2 வயது மகனும் தீயில் கருகி மரணம்.

கோலாசிலாங்கூர்

கார் ஒன்று டிரேலருடன் மோதிய விபத்தில் நேற்றிரவு இரண்டு வயது குழந்தையும் அவரின் தந்தையும் உடல் கருகி மாண்டனர். இச்சம்பவத்தில் இறந்தவர்கள் 37 வயது முகமட் ரிட்சோ பாட்லி பில் ரோஸ்லி மற்றும் 2 வயது அகமட் அரிவின் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 11.20 மணியளவில் லாதார் நெடுஞ்சாலை 9.2வது கிலோமீட்டரில் இவர்கள் பயணித்த புரோட்டோன் பெசோனா கார் கட்டுப்பாட்டை இழந்து டிரேலரின் பின்பகுதியை மோதியுள்ளது. இதனால் அக்கார் தீப்பற்றியதாக கோலா சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் சுப்ரின்தெட்டன் முகமட் அஸ்ரி தெரிவித்துள்ளார்.
தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் என மொத்தம் நால்வர் கெடாவிலிருந்து கோலாலம்பூருக்கு பயணித்துள்ளனர்.

கார் தீப்பற்றியதில் தந்தையும் மகனும் கருகிய வேளை 33 வயது கூ நூருல் மற்றும் 2 வயது டானிஸ் ஆகிய இருவரை பொதுமக்கள் காரிலிருந்து மீட்டு சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
20 பேர் அடங்கிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயில் கருகிய இருவரையும் வெளியே எடுத்து தஞ்ஞோங் காராங் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

Previous articleசைட் சாடிக் மீது சட்ட நடவடிக்கை அருண் துரைசாமி
Next articleஅமெரிக்க கார் ரேஸ் வீராங்கனை விபத்தில் பலி!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version