Home இந்தியா வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நித்தியானந்தா எங்கே?

வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற நித்தியானந்தா எங்கே?

புதுடில்லி –

சாமியார் நித்தியானந்தா இக்குவாடோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை எனவும் இந்திய அரசு தெரிவித்தது.

நித்தியானந்தா மீது பாலியல் புகார், குழந்தைகள் கடத்தல், சிறை வைத்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் அவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது.

நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளின் தூதரகங்களையும் அரசுகளையும் நாடியுள்ளோம். அவர் பற்றிய தகவல் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கும்படி கேட்டிருக்கிறோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவிஷ்குமார் தெரிவித்தார்.

நித்தியானந்தா இக்குவாடோர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. நித்தியானந்தா பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

Previous articleதமிழக உள்ளாட்சித் தேர்தல்: திமுக அமோக வெற்றி!
Next articleபேச்சு வழி தீர்வு காணாமல் வெளியேற மாட்டோம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version