கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதைக் குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது.
முருகன் பிறந்தது விசாகம் நட்சத்திரம் என்றாலும் முருகனை சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாதங்களில் வரும் கிருத்திகையைத் தாண்டி தை கிருத்திகை, கார்த்தி கிருத்திகை கொண்டாடப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்மக்கள் கொண்டாடுவது ஆடி கிருத்திகைதான்.