Home Hot News மிக கடினமான முடிவினை எடுக்க வேண்டிய கட்டாய காலம் – சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ...

மிக கடினமான முடிவினை எடுக்க வேண்டிய கட்டாய காலம் – சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

பெட்டாலிங் ஜெயா:
கோவிட் -19 வைரஸ் ஏற்படும் ஆபத்து குறித்து சுகாதார இயக்குநர் ஜெனரல் டத்தோ ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார், இது எந்த நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் வழங்கப்பட வேண்டும் என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்க வேண்டியிருக்கும் என்று கூறினார்.
தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இப்போது 64 நோயாளிகள் உள்ளனர், அவர்களில் 27 பேர் வென்டிலேட்டர்களில் உள்ளனர். நம்மிடம் குறைந்த அளவிலான வசதிகள் இருக்கிறது கவலை அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆதலால் எந்த நோயாளிக்கு வென்டிலேட்டர்களின் சலுகை கிடைக்கும் என்பதை முடிவு செய்ய வேண்டியிருக்கிறது என்றார்.
நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் வழங்க முடியாத அளவிற்கு நிலைமை ஏற்படாது என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

நேற்று புதிதாக 106 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதோடு மொத்தம் 1,624 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இது வரை 16 பேர் மரணமடைந்திருப்பதாகவும் செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் கூறினார்.

நேற்று பாதிக்கப்பட்ட 106 பேரில் 43 பேர் பெட்டாலிங் ஜெயா தப்ளிக் சமய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என்று டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 986 கோவிட் வைரஸ் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்களை தனிமைப்படுத்துவது முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருக்கக் கூடாது என்பதால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

இயக்க கட்டுப்பாட்டு ஆணைக்கு (MCO) நீட்டிப்பு சாத்தியம் குறித்து, டாக்டர் நூர் ஹிஷாம் கூறுகையில் அது எம்.சி.ஓவின் முடிவுகளின் மதிப்பீடு செய்வதைப் பொறுத்தது என்றார்.இப்போது நாம் என்ன செய்கிறோம் என்பது இந்த இரண்டு வார காலத்திற்கு மட்டுமானதே ஆகும்.

நான் முடிவினை உங்களிடமே விடுகிறேன். நீங்கள் MCO அறிவுறுத்தலை பின்பற்றினால், நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. வெற்றியும் தோல்வியும் நம் ஒவ்வொருவரையும் சார்ந்துள்ளது,” என்று அவர் கூறினார். இப்போது, நாங்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்வோம், மேலும் 10 முதல் 12 நாட்களுக்குப் பிறகு, நாங்கள் MCO ஐ நீட்டிக்க வேண்டுமா என்று பார்ப்போம்.

நாங்கள் இலகுவான அணுகுமுறையைப் பயன்படுத்துகிறோம், ஆனால் ஒருவேளை நாங்கள் இன்னும் கடினமான முறையை பயன்படுத்த வேண்டிய நேரம் இது. தேர்வு உண்மையில் பொதுமக்களிடமே உள்ளது, ”என்றார்.ஆன்லைனில் விற்கப்படும் ஹேண்ட்சேனிசெஸ்டரை மக்கள் தரமான தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்றும் “வீடுகளின் பின்புறத்தில் தயாரிக்கப்பட்டவை அல்ல” என்றும் அவர் கூறினார்.

இரத்த தானம் குறித்த கேள்விக்கு, டாக்டர் நூர் ஹிஷாம், எம்.சி.ஓ. பொதுமக்களுக்கு இரத்த தானம் செய்ய புதுமையான வழியை அமைச்சகம் அறிமுகப்படுத்தும் என்றார். நீங்கள் இரத்த தானம் செய்ய இரத்த வங்கி அல்லது மருத்துவமனைக்கு வருவதற்கு பதிலாக, அதைச் செய்ய நாங்கள் ஒரு குழுவை அனுப்பி அதை வீட்டிலேயே செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version