Home உலகம் ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா

ஐரோப்பாவை ஆட்டிப் படைக்கும் கொரோனா

ரோம் –

உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 7 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 670 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா புரட்டி எடுத்து வருகிறது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெய்ன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ளன.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் வைரஸ் தாக்குதலுக்கு 712 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.

ஸ்பெய்னிலும் கொரோனாவுக்கு நேற்று மட்டும் 498 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.

இத்தாலி, ஸ்பெய்னைத் தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும் கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் தாக்குதலுக்கு 365 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 696 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version