Home இந்தியா வேடிக்கை பார்க்கவா ஊரடங்கு?

வேடிக்கை பார்க்கவா ஊரடங்கு?

சென்னை –

கொரோனாவை ஒழிக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் கைப்பேசி சகிதமாக மோட்டார் சைக்கிள்களிலும் கார்களிலும் சுற்றித் திரிந்தனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நகரப் பகுதிகளிலும் கும்பல் கும்பலாகச் சுற்றிய இளைஞர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

இவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது இயக்கத்தினர் வலியுறுத்தினர். வீதியில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் தோப்புக்கரணம் போட வைத்ததைப் பலர் பாராட்டினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version