Home Hot News மலாயன் மேன்சன் – சிலாங்கூர் மேன்சன் வளாகம் அடைப்பு

மலாயன் மேன்சன் – சிலாங்கூர் மேன்சன் வளாகம் அடைப்பு

கோலாலம்பூர்: மலாயன் மேன்சன் – சிலாங்கூர் மேன்சன் வளாகத்தில் 15 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதை சுகாதார அமைச்சு  உறுதி செய்யப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

மேம்பட்ட மக்கள் நடமாட்ட  கட்டுப்பாட்டு தடையை (EMCO) கடைபிடிக்கும் நான்காவது இடமாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் சிலாங்கூர் மேன்சன் மற்றும் மலையன் மேன்சன் ஆகிய இருபகுதிகளை அறிவித்துள்ளார்.

இரு வளாகங்களிலும் கண்டறியப்பட்ட 15 கோவிட் -19 உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து சுகாதார அமைச்சின் (எம்ஓஎச்) உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் கூறினார்.

சம்பவங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, சுகாதார அமைச்சரின் ஆலோசனையின் பேரில் இந்த இரண்டு கட்டிடங்களுக்கும் EMCO இன் நான்காவது உத்தரவை நிறைவேற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு கட்டிடங்களிலுள்ள 365 குடியிருப்பு மற்றும் வணிக பிரிவுகளில் 6,000 குடியிருப்பாளர்களை உள்ளடக்கியது என்று இஸ்மாயில் இன்று பாதுகாப்பு அமைச்சின் தினசரி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version