Home இந்தியா இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு 199 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6412 ஆக உயர்வு 199 பேர் உயிரிழப்பு

பாதிப்பு 6412 ஆக உயர்வு 199 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளள்ன. எனினும், கடந்த சில தினங்களாக கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5734ல் இருந்து 6412 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 504 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 834 பேருக்கும், டெல்லியில் 720 பேருக்கும், ராஜஸ்தானில் 463 பேருக்கும், தெலுங்கானாவில் 442 பேருக்கும், கேரளாவில் 357 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version