Home மலேசியா எரிபொருள் பதுக்கல் புகார் இல்லை

எரிபொருள் பதுக்கல் புகார் இல்லை

எரிபொருள் பதுக்கல் புகார் இல்லை

பெட்டாலிங் ஜெயா, ஏப்.15-

உலக எண்ணெய் விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து பெட்ரோல் பதுக்கிய வழக்குகள் குறித்து எந்த புகார்களும் இடம்பெறவில்லை அறிவிக்கப்படவில்லை.

பொருட்களைக் கொண்டு செல்கின்றவர்கள் வழக்கமாக எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக தங்கள் எரிபொருளை மொத்தமாக வாங்குகிறார்கள், அவை ஏற்கனவே சில்லறை விலையை விட மலிவாக விற்கப்படுகின்றன என்பதால் பதுக்கலுக்கு வாய்ப்பில்லை.

உலகளாவிய எண்ணெய் விலைகள் கணிசமாகக் குறைந்துவிட்டாலும் எரிபொருளைப் பதுக்கி வைக்க பெட்ரோல் நிலையங்களுக்குச் செல்லத் தேவையில்லை என்றாகிவிட்டது எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக அதை வாங்குவது இன்னும் மலிவானதாகிவிட்டது என்கின்றனர்.

சமீப காலமாக மலிவான எரிபொருள் விலையை போக்குவரத்து வாகனங்கள் பயன்படுத்திக் கொண்டதாக என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

தற்போது, ​​ரோன் 95 , ரோன் 97 ஆகியவற்றின் சில்லறை விலைகள் முறையே லிட்டருக்கு வெ.1.25, வெ.1.55 ஆகும். அதே நேரத்தில் டீசல் ஒரு லிட்டருக்கு வெ.1.46 ஆக விற்பனையாகிறது.

நாட்டில் தொடர்ச்சியாக ஆறு வாரங்களாக எரிபொருள் விலைகள் குறைந்துவிட்டன, ரோன் 95 டீசல் விலை வெ. 2.08 , வெ 2.18 ஆகியவற்றின் மூடிய விலையை விடக் குறைவாகவே உள்ளன.

மார்ச் 18 ஆம் தேதி மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு முறை தொடங்கப்பட்டதிலிருந்து, பெட்ரோல் விற்பனையாளர்கள் விற்பனையில் 80 விழுக்காடு வரை சரிவு கண்டிருக்கிறது.

அவர்களில் பெரும்பாலோர் இன்னும் செயல்பட முடிந்தாலும், அவர்கள் வியாபாரம் செய்வதற்கான செலவை ஈடுகட்ட சிரமப்படுகிறார்கள், குறிப்பாக எரிபொருள் கொள்முதல் செய்யததை விட , மிகக் குறைந்த விகிதத்திலலேயே விற்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version