கோலாலம்பூர், ஏப்.16-
நான்கு வயதுக்குக் கீழ்ப்பட்ட 83 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார இலாகா அறிவித்துள்ளது.
நாடு தழுவிய அளவில் பரவலாக இப்பாதிப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் மலேசியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.