புதுடெல்லி,ஏப்ரல் 20-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. அதை பின்பற்றி, டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளும் பொது இடங்களில் எச்சில் துப்புவதற்கும், சிறுநீர் கழிப்பதற்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளன.
இதை மீறுவோருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.