Home மலேசியா 500 நாடுகளுடன் பேசினாரா?

500 நாடுகளுடன் பேசினாரா?

கோலாலம்பூர் –

கோவிட் – 19 நோய்த் தடுப்பு குறித்து தாம் 500க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்களுடன் பேசியதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக ஊடகங்களில் நெட்டின்சன்கள், பொதுமக்கள் அவரது இந்த அறிக்கையை மிகக் கடுமையாகச் சாடி வருகின்றனர். உலகில் மொத்தம் 195 நாடுகளே இருக்கின்ற நிலையில் 500க்கும் அதிகமான நாடுகளின் தலைவர்களுடன் பேசியிருப்பதாக அவர் கூறியிருப்பது மிகப்பெரிய நகைச்சுவையாக இருக்கிறது என்று நெட்டின்சன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடியுடனான ஃபேஸ்புக் நேரலை சந்திப்பில் அடாம் பாபா இந்தத் தகவலைச் சொல்லியிருக்கிறார்.
கோவிட்- 19 தடுப்பு நடவடிக்கைகளுக்காக மலேசிய சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை, முயற்சிகளை அனைத்துலக ரீதியில் அங்கீகரிப்பர் என்று தாம் நம்புவதாக ஸாஹிட் ஹமிடியிடம் அவர் தெரிவித்திருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version