Home மலேசியா அனைவரும் வீட்டிலிருப்பதே எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு – டாக்டர் நோர் இஷாம்

அனைவரும் வீட்டிலிருப்பதே எனக்கு வழங்கும் பிறந்தநாள் பரிசு – டாக்டர் நோர் இஷாம்

புத்ராஜயா (பெர்னாமா): “எனது பிறந்த நாளான இன்று மலேசியர்கள் வீட்டிலேயே தங்கியிருந்து சுகாதாரத்தை கடைப்பிடித்தால் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பரிசு” என்று டத்தோ  டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா புன்னகையுடன் கூறுகிறார்.

கோவிட் -19  தாக்கத்தில் பாதிக்கப்பட்ட நாளில் இருந்து  ஊடகங்களுக்கு முக்கிய செய்திகளை வழங்கி வரும் சுகாதார தலைமை இயக்குநருக்கு இன்று 56 வயதாகிறது.  சிலாங்கூர் சிப்பாங்கில் பிறந்த டாக்டர் நோர் இஷாம் ஒவ்வொருநாளும் கோவிட்-19 குறித்த அண்மைய நிலவரத்தை தொலைக்காட்சி வழி நமக்கு வழங்கி வருகிறார்.

தனது பிறந்தநாளை முன்னிட்டு, டாக்டர் நூர் ஹிஷாம் கோவிட்-19 தாக்கம் குறித்து ஒரு நல்ல செய்தியைக் கொண்டுவந்தார், மலேசியாவில் திங்கள்கிழமை (ஏப்ரல் 20) பதிவுசெய்யப்பட்ட புதிய உறுதி செய்யப்பட்ட சம்பவங்களின்  எண்ணிக்கை மார்ச் 12 ஆம் தேதிக்குப் பின்னர் மிகக் குறைவானது, இதில் 36 வழக்குகள் மற்றும் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

பெர்னாமாவிடம் பேசிய அவர், உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற கோவிட் -19 நோய்த்தொற்றுச் சங்கிலியை உடைக்கும் முயற்சியாக, பிறந்தநாள் பரிசாக மக்கள் நடமாட்டக் கட்டுபாட்டு உத்தரவிற்கு  (எம்.சி.ஓ) இணங்கி அனைத்து மலேசியர்களையும் வீட்டில் தங்குமாறு கேட்டுக் கொண்டார். டாக்டர் நூர் ஹிஷாம் இந்த கோரிக்கையை தனது மிக முக்கியமான பிறந்தநாள் பரிசுகளில் ஒன்றாக விவரித்தார்.

கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில் அவரின் அணுகுமுறை உலகின் மூன்று உயர் மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார அதிகாரிகளின் பட்டியலில் இவரின் பெயரும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சீனா குளோபல் டிவி நெட்வொர்க்கால் (CGTN) பட்டியலிடப்பட்ட மற்ற இரண்டு மருத்துவர்கள்  அமெரிக்காவின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் அந்தோனி ஃபாசி மற்றும் நியூசிலாந்தின் சுகாதார இயக்குநர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் ஆகியோராவர்.

மலேசியாவில் கோவிட் -19 தொற்றினை கையாள்வதில் நேரடியான மற்றும் அமைதியான அணுகுமுறையால் டாக்டர் நூர் ஹிஷாம் உலகின் சிறந்த மருத்துவர்களில் ஒருவராக முடிசூட்டப்பட்டதாக சிஜிடிஎன் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், சி.ஜி.டி.என், டாக்டர் நூர் ஹிஷாம் மற்றும் பிற இரண்டு மருத்துவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது, ஆனால் அவர்கள் இப்போது அந்தந்த நாடுகளில் தொற்றுநோய் குறித்த தகவல்களின் மிகவும் “நம்பகமான” ஆதாரங்களாக மாறிவிட்டனர்.

அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் நூர் ஹிஷாம், யுனிவர்சிட்டி கெபங்சானான் மலேசியாவிலிருந்து (யு.கே.எம்) அறுவை சிகிச்சையில் முதுகலை பட்டம் மற்றும் மருத்துவ முனைவர் பட்டம் பெற்றவர், மார்ச் 1,2013 அன்று டத்தோஶ்ரீ  டாக்டர் ஹசன் அப்துல் ரஹ்மானுக்கு பதிலாக சுகாதார தலைமை இயக்குநராக  நியமிக்கப்பட்டார். – பெர்னாமா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version