சிரம்பான், ஏப்.24-
இங்குள்ள ஜெலபு கம்போங் சாலினில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஊனமுற்ற குழந்தைகள் உட்பட 9 பேர் நேற்று இரவு தீயணைப்பு மீட்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.
மாலை 5.30மணி முதல் பெய்த கனமழையைத் தொடர்ந்து தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்தாக அவர்கள் கூறினர். இரவு 9.15 மணியளவில் இரண்டு முதல் 36 வயதுக்குட்பட்ட அவ்விருவரும் மீட்கப்பட்டதாக ஜெலபு தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் முகமட் பாட்சில் முகமட் யூனுஸ் தெரிவித்தார்.
வெள்ள நீர் சுமார் 1.8 உயர்திருந்தது . சுங்கை கெனாபோய், அதன் கரைகளில் நிரம்பி வழியும் நீரின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இரு குடும்பங்களின் உறுப்பினர்களும் கம்போங் சென்னாவில் உள்ள பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கம்போங் சென்னா, கம்போங் டெலிகுங் , கம்போங் பூம் ஆகிய மூன்று கிராமங்களையும் வெள்ளம் பாதித்ததாக பாட்சில் கூறினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 41 பேர், டத்தோ உண்டாங் அப்துல்லா தேசிய இடைநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக்வும் அவர் கூறினார். –