கோலாலம்பூர்:
பெர்லிஸ் மாநிலத்தைத் தொடர்ந்து கெடா மாநிலம் கொரோனா பாதிப்பைக் கடந்த பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் 93 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கொண்ட நோயாளிகள் யாரும் பதிவாகாத காரணத்தால் கெடா மாநிலம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு மன்றம் கூறியது.