Home மலேசியா குடிபோதையில் இருந்த வாகனமோட்டியால் கடமையில் இருந்த போலீஸ் அதிகாரி மரணம்

குடிபோதையில் இருந்த வாகனமோட்டியால் கடமையில் இருந்த போலீஸ் அதிகாரி மரணம்

காஜாங்: குடிபோதையில் வாகனத்தை செலுத்திய வாகனமோட்டி ஒருவர் சாலைத் தடுப்புப் பணியில் இருந்த  ஒரு போலீஸ் கார்போரல் மீது மோதியதால் அவர் மரணமடைந்தார்.  ஞாயிற்றுக்கிழமை (மே 3) அதிகாலை 2.11 மணியளவில் இந்த சம்பவம் லெக்காஸ் நெடுஞ்சாலை சாலைத் தடுப்பில் நிகழ்ந்தது.

முதல் கட்ட விசாரணனையின்போது காஜாங் டோல் பிளாசா நோக்கிச் செல்லும் ஒரு ஹைலக்ஸ் டிரைவர் சாலைத் தடுப்புக்கு வரும்போது தனது வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார். அவர்  மது போதையில் வாகனம் ஓட்டியதாக நம்பப்படுகிறது.

அங்கு கடமையில் இருந்த ஒரு போலீஸ்காரர் வாகனம் மீது மோதியது. சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு போலீஸ் வாகனமும் சேதமடைந்தது  காஜாங் மாவட்ட காவல்துறைத் துறை தலைவர் ஏசிபி மொஹமட் ஜைத் ஹாசன் ஞாயிற்றுக்கிழமை (மே 3) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபர் தற்போது காயங்களுக்காக செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பலியானவர் கார்போரல் சஃப்வான் முஹம்மது இஸ்மாயில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

போலீஸ் படைத்தலைவர்  டான் ஸ்ரீ அப்துல் ஹமீத் படோர் பி.டி.ஆர்.எம் இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version