Home மலேசியா குழந்தை பராமரிப்பு மையங்கள் இன்னும் ஒரு மாதத்திற்கு திறக்கப்படாது

குழந்தை பராமரிப்பு மையங்கள் இன்னும் ஒரு மாதத்திற்கு திறக்கப்படாது

பெட்டாலிங் ஜெயா: எஸ்ஓபியின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், குழந்தை பராமரிப்பு மையங்கள் மேலும் ஒரு மாதத்திற்கு திறக்கப்படமாட்டாது.

மலேசியாவின் பதிவுசெய்யப்பட்ட குழந்தை பராமரிப்பு வழங்குநர்கள் சங்கத்தின்  தலைவர் அனிசா அஹ்மத், அரசாங்கம் அவர்களுக்காக கடுமையான நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) வகுத்துள்ளதாகவும், எனவே அவர்களுக்கு இணங்க நேரம் தேவை என்றும் கூறினார். திங்கள் அல்லது மே 12ஆம் தேதி  கூட திறக்க முடியாது என்றார் அவர்.

சில பணியாளர்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து  திரும்பி வந்ததாகவும், அவர்கள் வேலைக்குத் திரும்பும்போது  குழந்தை பராமரிப்பு மையங்களை மீண்டும் திறப்பதற்கு முன்பு 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கினார். வளாகத்தை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மேலும் மீண்டும் திறப்பதற்கு முன்பு சுகாதார அமைச்சின் ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் நிச்சயமாக கால அவகாசம் தேவைப்படும் என்றார்.

குழந்தை பராமரிப்பு மையங்கள் பச்சை, மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு மண்டலம் என எங்கிருந்தாலும் அது செயல்படாது என்று அனிசா நேற்று கூறினார்.

SOP காரணமாக, குழந்தை பராமரிப்பு மையங்கள் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் மீண்டும் திறக்கப்படும் என்று அனிசா மதிப்பிட்டார். இந்த குழந்தை பராமரிப்பு மையங்கள் மீண்டும் இயங்கும்போது கூட, எம்.சி.ஓவிற்கு முன் எல்லா குழந்தைகளையும் சாதாரணமாக அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

குழந்தைகளிடையே கூடல் இடைவெளி நடவடிக்கைகள் விவாதிக்கப்பட்ட SOP இன் ஒரு பகுதியாக இருப்பதால் தான்  என்று அனிசா கூறினார், இது குறிப்பாக தூக்க மற்றும் உணவு நேரங்களில் நடைமுறையில் இருக்கும்.

நாங்கள் கூடல்  தூரத்தை கடைபிடிக்க விரும்பினால் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். எனவே எங்கள் இலக்கு சாதாரண எண்ணிக்கையில் 50% மட்டுமே இருக்க வேண்டும், எடுத்துக்காட்டாக வழக்கமான 40 க்கு பதிலாக 20 குழந்தைகள் மட்டுமே இருப்பர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version