Home மலேசியா மேலும் ஒரு கொரோனா குழுமம்; 28 பேர் பாதிப்பு

மேலும் ஒரு கொரோனா குழுமம்; 28 பேர் பாதிப்பு

கோலாலம்பூர்:
தலைநகரில் உள்ள கட்டட கட்டுமானப் பகுதியில் 28 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டடக் கட்டுமானப் பணியாளர்கள் 28 பேருக்கு தொற்று இருப்பதைத் தொடர்ந்து புதிய கொரோனா குழுமம்(கிளஸ்டர்) குறித்த அறிவிப்பை மலேசிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

28 பணியாளர்களும் யார் யாரைச் சந்தித்துள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

எனினும் தலைநகரின் எந்தப் பகுதியில் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர் என்பது குறித்த தகவலை அமைச்சு இன்னமும் வெளியிடவில்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version