Home சினிமா பிரேமம் இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் அருண்விஜய்

பிரேமம் இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் அருண்விஜய்

‘நேரம்’ படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ் புத்திரன், அடுத்ததாக மலையாளத்தில் இயக்கிய ‘பிரேமம்’ படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனரானார்.

‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

பிரேமம் படத்திற்கு பின் காளிதாஸ் ஜெயராமை வைத்து படம் இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் அப்படத்தை பாதியிலேயே நிருத்திவைத்து இருக்கிறார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்தை தமிழில் இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் மம்முட்டி மற்றும் அருண்விஜய்யை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படம் குறித்த அறிவிப்பு லாக்டவுனுக்கு பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version