பகாங் மாநிலத்தின் திரியாங் பட்டணத்திற்கு அருகில் உள்ள திரியாங் தோட்டத்தில் எழுவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
திரியாங் தோட்டத்தின் முதலாவது டிவிசனில் அதிகமான இந்தோனேசியர்கள் தங்கியுள்ளனர். இவர்களுள் சிலருக்கு கோவிட்19 தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தென் பகாங் சுகாதார அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின்போது ஏழு இந்தோனேசிய ஆடவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவிட் 19 உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் குவாந்தான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.