Home சினிமா நடிகை மோஹனா குமாரி உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தாக்கிய கொரோனா

நடிகை மோஹனா குமாரி உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தாக்கிய கொரோனா

இந்தி நடிகை மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ‘ஏபிசிடி’ இந்தி படத்தில் நடித்துள்ளார். பியார் துனே கியா கியா, பியர் பைல்ஸ், சில்சிலா பியார் கா, டுவிஸ்ட்வாலா லவ் உள்பட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். டொரோடானில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து நடிகை மோஹனா குமாரி சிங் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் பரிசோதனையில் மோஹனா குமாரி சிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மோஹனா குமாரி சிங் கூறியபோது அவரது மாமியாருக்கு காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டதாகவும். அப்போதுதா அவருக்கும் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று தெரியவந்தது என்று அவர் கூறி உள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version