நிபந்தனையுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிமுறையை மீறி வேன் மற்றும் பஸ்சில் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக ஆறு வேன் ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பஸ் ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெராய் மற்றும் பட்டர்வொர்த் பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக பினாங்கு மாநில சாலைப் போக்குவரத்து அமலாக்க இலாகா இயக்குநர் அட்னான் முகமட் இஷா தெரிவித்தார்.