தாமரைப்பூவானது பண்டைய காலத்திலிருந்து புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. பண்டைய இந்தியப் புராணங்களிலும் பழங்கால இந்திய மருந்து வகைகளிலும் தாமரை மிகவும் போற்றப்படும் இடம் பிடித்துள்ளது.
செந்தாமரை மலரின் பண்பு :
வெண்தாமரையைப் போன்றே நீரில் வளரும். சிவப்புநிறப்பூக்களையுடையது. செந்தாமரை இதயத்திற்கு வலிமை தரும், இரத்தக் கொதிப்பை குணமாக்கும்.
அன்னை மஹாலக்ஸ்மிதேவியின் அருளைபெற செந்தாமரை மலர் கொண்டு பிரார்த்தனை செய்யவும். அது அன்னைக்கு உகந்த மலர், அன்னைக்கு பிரியமானதை அற்பணிக்கும் பொது நாம் அன்னைக்கு பிரியமானவர் ஆகிவிடுவோம் அல்லவா?
செந்தாமரை மலரின் பலன் :
செந்தாமரையைக் கொண்டு இறைவனைப் பூஜிக்கும் போது நமக்கு புது உணர்வுகளும், புதுத் தெம்பும் ஏற்படும்.