Home மலேசியா தொலைப்பேசிகளை திருடிய ஆடவர் கைது

தொலைப்பேசிகளை திருடிய ஆடவர் கைது

கிளானா ஜெயா ஜைன்ட் பேரங்காடியில் அமைந்துள்ள தொலைப்பேசி கடையில் திருடிய ஆடவரை பெட்டாலிங் ஜெயா போலீஸார் கைது செய்தனர் என்று பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி ஏசிபி நிக் எஸானி பின் முகமட் பைசல் தெரிவித்தார்.

லெம்பா சுபாங்கில் உள்ள ஒரு வீட்டில் போலீஸார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். அவ்வீட்டில் இருந்த அந்நபரை கைது செய்ததோடு 12 வகையான தொலைப்பேசிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 40 வயதான அந்த ஆடவர் மேல் விசாரணைக்காக 4 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது 8 திருட்டு குற்றச்சாட்டுகளும் 12 போதைப் பொருள் குற்றச்சாட்டுகளளும் பதிவாகியுள்ளது என்று அவர் கூறினார்.

Previous articleதிரிகளின் வகைகளும் அதன் பலன்களும்
Next articleதீவிரவாத தடுப்பு படையில் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version