நாட்டின் அரசியல் வட்டாரத்தில் முதல் முறையாக துன் டாக்டர் மகாதீர் முகமட் பிகேஆர் கட்சியின் தலைமையகத்திற்கு சென்றிருக்கிறார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை தான் இருந்து வருகிறது. கட்சித் தாவல் தற்போது தாறுமாராக நடந்து வருகிறது. எனவே இன்று பிகேஆர் தலைமையகத்தில் மகாதீர் அமர்ந்திருப்பது அரசியல் களத்தை அனல் பறக்க செய்துள்ளது.
கட்சியின் உயர் மட்டம் அமரும் வரிசையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துன் மகாதீர், சபா வாரிசான் கட்சித் தலைவர் ஷபி அப்டால், அமானா தலைவர் மாட் சாபு ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர். இக்கூட்டத்தில் பெர்சத்து, ஜசெக, அமானா ஆகிய கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.