Home Hot News  மட்டனில் வெடிகுண்டு – வாய் கிழிந்து இறந்த நரி 

 மட்டனில் வெடிகுண்டு – வாய் கிழிந்து இறந்த நரி 

மட்டனில் வெடியை மறைத்து வைத்துள்ளதை அறியாத நரி ஒன்று ஆசையாக அதை சாப்பிட வந்துள்ளது.

அப்போது வெடி வெடித்து சிதறியதில் நரியின் வாய் கிழிந்து இறந்தேவிட்டது. இந்த சம்பவம் நம் திருச்சியில்தான் நடந்துள்ளது!

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் வாழை, கரும்பு சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இடமாகும். அதனால் மான், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன உயிரினங்கள் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வெளியேறி, இந்த வயல் பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன.

மேலும் விளைபொருட்களை அவை சாப்பிட்டு விடுவதாகவும், பயிர்களை நடமாடியே நாசம் செய்துவிடுவதாகவும் கூறப்படுகிறது..

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version