Home Hot News ஒரே நாளில் 1300 பேர் பலி – கொரோனா உச்சத்தில் பிரேசில்

ஒரே நாளில் 1300 பேர் பலி – கொரோனா உச்சத்தில் பிரேசில்

ஒரே நாளில் 1300 பேர் பலி – உச்சத்தில் பிரேசில்

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்காவை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரேசிலில் கொரோனாவால் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பும், 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.75 லட்சத்தைக் கடந்துள்ளது.

பிரேசிலில் கொரோனாவுக்கு 1,300 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்து 797 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version