Home இந்தியா கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

கார்ட்டூன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை

தொலைக்காட்சி முன் பல மணி நேரம் அமர்ந்து கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு பெற்றோர் கண்டிப்பு தெரிவித்ததால் 13 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

புணே மாவட்டம் பிப்வேவாடி பகுதியில், வசித்து வந்த பள்ளிச் சிறுவன் நாள் முழுக்க கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். கடந்த புதன்கிழமை சிறுவனின் தாய் இதனைக் கண்டித்துள்ளார். சிறுவனின் சகோதரி தொலைக்காட்சியை அணைத்துவிட்டுள்ளார்.

இதனால் அதிருப்தி அடைந்த சிறுவன், மாடியில் உள்ள அறைக்குச் சென்று மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

பல மணி நேரம் ஆகியும் சிறுவன் உணவருந்த கீழே வராததால், சகோதரி மாடிக்குச் சென்று பார்த்த போதுதான் சம்பவம் பற்றி குடும்பத்தாருக்குத் தெரிய வந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version