ஓய வில்லை இன்னும்,
ஓலக் குரல் எங்கும்!
காய வில்லை ஈரம்,
கொரோ னாபெரும் பாரம்!
பாவம்! மக்கள் துன்பப்
பட்ட தெல்லாம் போதும்!
காவெ டுத்துச் சாய்க்கும்,
காலம் அலங்கோ லமாகும்!
இன்னும் என்ன வேண்டும்,
எடுத்த தெல்லாம் போதும்!
மண்ணில் உயர்ந்த நாடு
மலேசி யத்தைவிட் டோடு!
வீ.கா. அருண்மொழித்தேவன்