வயது குறைந்த பெண்கள் திருமணம் தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்துரைத்த் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவிடம் விசாரணை நடத்தப்படும் என புக்கிட் அமான் சிஐடி துணை இயக்குநர் மியோர் வாஹிட் தெரிவித்தார்.
1998ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு பல்லூடாகச் சட்டத்தின் கீழ் இவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்தச் சட்டத்தின் கீழ் அவர்கள் தவறு இழைத்திருந்தால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என்றார் அவர்.
வரும் ஜூன் 23ஆம் தேதி ஹன்னா இயோவிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார். புக்கிட் அமான் போலீசார் என்னைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு வரும்படி கூறியுள்ளனர் என்றார் அவர்.