Home இந்தியா பனைமரத்தில் பிரிந்த உயிர்

பனைமரத்தில் பிரிந்த உயிர்

பனை மரத்தின் உச்சியில் ஒரு தொழிலாளியின் கடைசி நிமிடங்கள் பலரைப் பதறவைத்திருக்கிறது. பனை மரத்து உச்சியில் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி இருக்கிறார் நடேசன் என்பவர், அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் கடைசியில் அநத பனை மரத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்துயரச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள பகுதி விஜயநாராயணபுரம்த்தில் நிகழ்ந்திருக்கிறது.

இங்கு வசித்து வந்தவர் நடேசன். இவருக்கு 63 வயதாகிறது.. இவர் ஒரு பனை மரத் தொழிலாளி.. கிருஷ்ணகுமார் என்பவரின் தோட்டத்தில்தான் நடேசன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், பதனீர் இறக்க போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார். நடேசன். ஆனால் அவர் ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

சந்தேகமடைந்த அவரது மனைவி கணவரைத் தேடி தோட்டத்துக்கு போனார். அப்போது பனை மரத்தின் உச்சியில் நடேசன் தொங்கி கொண்டிருந்தார்.. பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் கிடநத்தைக் கண்டு அலறினார். சத்தம் கேட்டு அங்கிருந்தோர் ஓடிவந்தனர்.. அதில் சக பனைத் தொழிலாளி ஒருவர் மரம் ஏற முயன்றார், அவரால் முடியவில்லை.

தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். ஆனால், அந்த பனை மரம் ஏறும் அவர்களிடம் அடுக்கு ஏணி வசதி இல்லை. அவர்களில் யாருக்கு.ம் பனை மரம் ஏறும் அளவுக்கு பயிற்சியும் இல்லை.. அதனால் ஏணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு கயிறு கட்டிக் கொண்டு பனை மரம் ஏறினர் . இதற்கே ஒருமணி நேரம் ஆகிவிட்டது. மயக்கம் மயங்கிக் கிடந்த நடேசனை மீட்டதும் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது..

முயற்சிகள் தோற்றுப்பொயின. நடேசனை காப்பாற்ற முடியவில்லை.. கடைசி வரை நினைவு திரும்பாமலேயே நடேசன் உயிர் பிரிந்துவிட்டது. நடேசனுக்கு என்ன ஆனது? எதனால் பனை மட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டார் என தெரியவில்லை.. பல வருடமாக பனை மரம் ஏறும் பழக்கப்பட்ட தொழிலாளிக்கு மரம் ஏறுவதில் பிரச்சினை இருந்திருக்காது என்றே தெரிகிறது.

ஆனாலும் ஒரு மணி நேரப்போராட்டம் நஅவரை காப்பாற்ற முடியவில்லை. அதேசமயம், தீயணைப்பு வீரர்களிடம் உயரமான அடுக்குகளை கொண்ட ஏணிகள் கையிருப்பில் இல்லாதது அதிர்ச்சியை தருகிறது.. நகர்ப்புறங்களில் இல்லாவிட்டாலும், தென்மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் இந்த ஸ்கைலிப்ட எனப்படும் ஏணிகளை அவசரத்துக்கு கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version