இதற்கிடையே, கடந்த மாதம் 30ஆம் தேதியில் இருந்து தலைநகர் பெய்ஜிங்கில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதனால், அங்கு வசிப்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கான மாதிரி சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.
கடந்த 11ஆம் தேதியில் இருந்து 20ஆம் தேதிவரை, 22 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, உணவு விநியோக நிறுவனங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் ஊழியர்களை குறிவைத்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 227 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரு இந்திய உணவகத்தின் உரிமையாளர் தனது ஊழியர்களுக்கு தொற்று இல்லை என்று தெரிவித்தார்.