Home மலேசியா காரில் கஞ்சா வைத்திருந்த இரு பெண்கள் கைது

காரில் கஞ்சா வைத்திருந்த இரு பெண்கள் கைது

கிளானா ஜெயாவிலுள்ள தமது வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இரு பெண்களை போலீசார் கைது செய்ததாக பெட்டாலிங் ஜெயா காவல் துறை தலைவர் நிக் எஸானி முகமட் பைசல் தெரிவித்தார்.

நேற்று (புதன் கிழமை) மாலை 5 மணியளவில் கிளானா ஜெயாவில் வாஜா ரக காரில் சென்றுக் கொண்டிருந்த மலேசிய பெண்கள் இருவரை போலீசார் சோதனை செய்தனர்.

அக்காரில் 125 கிராம் எடைக் கொண்ட கஞ்சா பொட்டலம் இருந்ததை தொடர்ந்து 25 வயது நிரம்பிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தாம் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக ஒரு பெண் ஒப்புக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில் அவர்களின் வீட்டிற்குச் சென்று போலீசார் சோதனை செய்தனர்.

அவ்வீட்டில் 4 கஞ்சா செடிகளை போலீசார் கண்டெடுத்தனர். கைது செய்யப்பட்ட இருவருமே மேல் விசாரணைக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version