Home மலேசியா டானாவ் கோத்தா தேசிய இடைநிலைப்பள்ளிக்கு மாமன்னர் வருகை

டானாவ் கோத்தா தேசிய இடைநிலைப்பள்ளிக்கு மாமன்னர் வருகை

ஆசிரியர்கள் ,  மாணவர்களின்  பாதுகாப்பு , உடல்நலம் குறித்து பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா தனிப்பட்ட அக்கறையுடன் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படும் மீட்பு இயக்க கட்டுப்பாட்டு ஆணை குறித்து அறியும் பொருட்டும் நேருக்கு நேர் கற்பித்தல்,  கற்றல் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவும் அவரது மகன் தெங்கு முஹம்மது இஸ்கந்தர் ரியாதுடின் ஷாவுடன், கோலாலம்பூர் டானாவ் கோத்தா தேசிய இடைநிலைப்பள்ளிக்கு, காலை 10 மணிக்கு வருகை தந்தார். அப்போது  மூத்த கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின், கல்வி அமைச்சகம் (MOE), மத்திய பிரதேச கல்வித் துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

பேரரசர் வருகையில் அவரது உடல் வெப்பநிலையையும் சரிபார்த்து, பள்ளியின் மாணவரால் கொண்டுவரப்பட்ட கை சுத்தியைப்  பயன்படுத்தி அவரது கைகள் சுத்திகரிக்கப்பட்டன.

தொடர்ந்து பள்ளி திறப்பு மேலாண்மை விளக்கங்கள், வழிகாட்டுதல்களை அமல்படுத்துவது,  கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய புதிய இயல்பு குறித்தும் அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அல்-சுல்தான் அப்துல்லா பள்ளி சிற்றுண்டிச்சாலை,  அறிவியல் ஆய்வகம், தையல் பட்டறை ஆகியவற்றைப் பார்வையிட்டார். வகுப்பறையில் சாப்பிடும் முறை, பல மாணவர்களுடன்  எஸ்ஓபி கூடல் கூடல் இடைவெளி  குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்கும் முறையான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கும் மேற்கொண்ட பள்ளி நிர்வாகிகள், அனைத்து ஆசிரியர்களுக்கும் பேரரசர் பாராட்டு தெரிவித்ததாக இஸ்தானாவின் அரண்மனை  காப்பாளர் டத்தோ ஃபாட்சில் ஷம்சுதீன் தெரிவித்தார்.

தங்கள் ஆசிரியர்களையும் நண்பர்களையும் பார்ப்பதைத் தவறவிட்ட, ஆனால், இன்னும் பள்ளிக்குத் திரும்ப அனுமதிக்கப்படாத பிற மாணவர்களைப் பொறுமையாக இருக்கும்படி அவர் ஆலோசன கூறினார்.

ஜூன் 24 முதல், நாடு முழுவதும் 2,440 பள்ளிகளில் இருந்து மொத்தம் 500,444 ஐந்தாவது , ஆறாவது பாரம் படிக்கும்  மாணவர்கள் பள்ளிக்குத் திரும்ப  அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் 2020 எஸ்.பி.எம்,  சிஜில் வோகாஷனல் மலேசியா (எஸ்.வி.எம்), சிஜில் திங்கி பெர்செகோலாஹான் மலேசியா (எஸ்.டி.பி.எம்)  சிஜில் திங்கி அகமா மலேசியா (ஸ்டாம்) தேர்வுகள், அதற்குச் சமமான தேர்வுகளுக்குத் தயார்படுத்தப்படுவர் என்றும் மன்னருக்கு விளக்கினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version