Home மலேசியா மலேசியா-சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறக்க கலந்துரையாடல்

மலேசியா-சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறக்க கலந்துரையாடல்

ஜோகூர் பாரு: மலேசியா-சிங்கப்பூர் எல்லையை மீண்டும் திறப்பதற்கான கலந்துரையாடலும்  அதற்கான ஏற்பாடுகளும்  தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜோகூர் மந்திரி பெசார்  டத்தோ ஹஸ்னி முகமது தெரிவித்துள்ளார். எல்லையை மீண்டும் திறப்பது விரைவில் நடைபெறுவதை உறுதிசெய்ய மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தனக்கு உறுதியளித்துள்ளார் என்றார்.

சிங்கப்பூர் அதன் பொதுத் தேர்தல் முடிவடையும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கலாம். ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்பாடுகள் குறித்த பேச்சு வார்த்தை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கூறினார். சிங்கப்பூரில் பணிபுரிபவர்கள் மீண்டும் தினமும் பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான வழிகள் குறித்து ஜோகூர் அரசு ஆலோசனைகளை வழங்கியுள்ளது என்று ஹஸ்னி கூறினார்.

சிம்பாங் ரெங்காமில் உள்ள  கம்போங் டத்தோ இப்ராஹிம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) குவாங் மாவட்டத்திற்கு தனது பணி  நிமித்தமான பயணத்தின் போது அவர் தனது உரையில் இவ்வாறு கூறினார். முன்னதாக, வெளியுறவு மந்திரி டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் உசேன்  சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் சிங்கப்பூருக்கும்  மலேசியாவிற்கும் இடையிலான எல்லையை மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது (தேர்தல்) பாதிக்காது (எல்லையை மீண்டும் திறப்பது). வெள்ளிக்கிழமை (ஜூன் 26) நடந்த மெய்நிகர் ஆசியான் உச்சி மாநாட்டின் போது சிங்கப்பூரின் பிரதமர் லீ ஹ்சியன் லூங் கலந்து கொண்டார்.  தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகும், சிங்கப்பூரின் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணனுடன் நான் இன்னும் கலந்துரையாடி வருகிறேன் என்று அவர் கூறியிருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version