Home உலகம் இந்தியா-சீன மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமெரிக்கா தகவல்

இந்தியா-சீன மோதல்: நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமெரிக்கா தகவல்

நிலைமை மேலும் மோசமடையும் வகையில் இரு நாட்டு ராணுவமும் எல்லையில் போர் தளவாடங்களை குவித்து வருகின்றன. பதற்றத்தை தனிக்க இந்திய-சீன ராணுவ கமண்டர்கள் அளவிளான பேச்சுவார்த்தையும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்திய-சீன பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஹெல்லி மெக்கிம்னி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், இந்திய-சீன பிரச்சனையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என இரு நாடுகளுமே விரும்புகின்றன. தற்போது நிலவி வரும் சூழ்நிலைக்கு அமைதியான முறையில் தீர்வுகான நாங்கள் முழு ஆதரவு தருகிறோம்.
மேலும், இந்தியா-சீனா எல்லையில் சீனாவின் ஆக்கிரோஷமான நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீன மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பின் முழு உருவத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை தன்மையை காட்டுவதாக அதிபர் டிரம்ப் கூறியதாக ஹெல்லி தெரிவித்துள்ளார்.
Previous articleKebocoran Gas di Tehran 19 maut
Next articleSindiket proses minuman keras palsu tumpas

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version