Home இந்தியா ஏவுகணையை அனுப்புவோம் சீனா மிரட்டல்

ஏவுகணையை அனுப்புவோம் சீனா மிரட்டல்

அணு ஆயுத போர் கப்பலை அனுப்பிய அமெரிக்கா..

தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா நிறுத்தி உள்ள அணு ஆயுத போர் கப்பல்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிப்போம் என்று சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சீன அரசுக்கு நெருக்கமான குளோபல் டைம்ஸ் இதழ் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த எச்சரிக்கையை விடுத்து இருக்கிறார். சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தென் சீன கடல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது.

கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் இருந்தே இந்த மோதல் நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இது முழுமையான மோதலாக வெடிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

தென் சீன கடல் எல்லைப் பகுதியில் 90விழுக்காடு எங்களுக்குதான் சொந்தம் என்று சீனா தம்பட்டம் அடிக்கிறது. இந்த நிலையில் சீனாவின் தென் சீன கடல் எல்லை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா அங்கு தனது படைகளை குவித்து வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version