Home மலேசியா சுவர் ஓவியத்தில் மாமன்னர், முன்னணித்தலைவர்கள்

சுவர் ஓவியத்தில் மாமன்னர், முன்னணித்தலைவர்கள்

சுவரை அலங்கரிக்கும் முகங்களில் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின், சுகாதார தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஆகியோரின் உருவப்படங்களைச் சுவரோவியக் கலைஞர் ஒருவர் அற்புதமாகத் தீட்டியிருப்பது வைரலாகிவருகிறது.

ஓவியர் முகமது சுஹைமி அலி 27, இப்பகுதியை அழகுபடுத்தும்  நோக்கத்தில் ஓவிய முயற்சியில் இறங்கினார்.  அவரது கலைப்படைப்புக்கு சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்று அவர் எதிர்ப்பார்க்கவில்லையென்கிறார்.

அவரது நண்பர்களான  27 வயதான அப்துல் ஹாடி ராம்லி, 26 வயதான ஃபிர்டாவுஸ் நோர்டின் ஆகியோரின் உதவியுடன் ஐந்து ஓவியங்களை வரைவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே கூறியிருக்கிறார் அவர்.

கடந்த பிப்ரவரியில் நடந்த அரசியல் நெருக்கடியை நிவர்த்தி செய்வதிலும் தீர்ப்பதிலும் மன்னரின் ஞானத்திற்கு நன்றியுணர்வின் அடையாளமாக மட்டுமே வரைவதற்கு மட்டுமே அவர் விரும்பினார். ஆனால் மார்ச் 18 முதல் இயக்க கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) அமல்படுத்தும் போது, ​​கோவிட் -19 தொற்றைத் தடுப்பதற்காக பல தலைவர்கள் உதாரணமாக இருந்தனர். இதில் பலர் திட்டமிடல் உத்திகளை வழங்குவதைக் கண்டதால்  அந்த முகங்களும் சுவரோவியத்தில் இடம்பெற்றன என்றார் அவர்.

கோவிட் -19 தொற்று முதன்முதலில் நாட்டைத் தாக்கியபோது, ​​ நாட்டின் தலைவர்கள் , முன்னணி வீரர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். ஏனென்றால் மக்கள் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த அவர்கள் அதிகதியாகம் செய்ய வேண்டியிருந்தது.

மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்,  பிரதமர் முஹிடின் யாசின் ,  அமைச்சர் (மத விவகாரங்கள்) செனட்டர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரி ஆகியோரின் உருவங்களும் சுவரில் வரையப்பட்டன. இது, பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. இச்சுவர் ஓவியங்கள் இப்போது வைரலாகிவிட்டன.

ஷா ஆலம், யுனிவர்சிட்டி டெக்னோலாஜி மாராவிலிருந்து நுண்கலைகளில் பட்டம் பெற்ற முஹம்மது சுஹைமி, ஐந்து உருவப்படங்களையும் முடிக்க 500 வெள்ளியை செலவு செய்திருக்கிறார். இவை வரை பொருட்கள் , வண்ணப்பூச்சுகளுக்கான செலவாகும்.

சுவரோவியம் இருக்கும் பகுதி, மறைவாக இருப்பதால் பலருக்குத் தெரியாது, ஆனால், இருப்பிடத்தை அறிய வாட்ஸ்அப் வைத்திருக்கிறேன். எங்கள் ஓவியத்தைப் புகைப்படங்கள் எடுக்க ஜொகூரிலிருந்து வந்ததது கண்டு வியந்ததாகவும் ஓவியர் கூறுகிறார்.

முகமது சுஹைமி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஓவியக் கலையில் முதன்முதலில் ஈடுபட்டதிலிருந்து நாடு முழுவதும் 200 க்கும் மேற்பட்ட சுவரோவியங்களை வரைந்துள்ளார்.

எதிர்காலத் திட்டங்களைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​ தனது சுவரோவிய உருவப்படங்களில் மற்ற ஆளுமைகளை வரைவதற்கும் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார், அவர்களில் பிரபல மலேசியத் திரைப்படக் கலைஞரான  மறைந்த டான் ஸ்ரீ பி. ராம்லி, நடிகரும் நகைச்சுவை நடிகருமான டத்துக் அஜீஸ் சத்தார் ,  எஸ்.சம்சுதீன் ஆகீயோர் கற்பனையில் இருப்பதாகக் கூறுகிறார் அவர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version