Home மலேசியா குடியேறிகளை அமர்த்தினார்,அபராதம் செலுத்தினார்

குடியேறிகளை அமர்த்தினார்,அபராதம் செலுத்தினார்

இந்த ஆண்டு ஜனவரியில் 68 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை தனது வளாகத்திற்குள் நுழைய அனுமதித்ததாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டமுன்னாள் செனட்டருக்கு மொத்தம் 340,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி அஹ்மட் சசாலி உமர்,  என்.எஸ்.கே ஹோல்டிங்ஸ் எஸ்.டி.என் பி.டி உரிமையாளரான 56 வயதான சிவ் என்பவருக்கு இந்த அபராதத்தை விதித்தார்.

சட்டவிரோதமாக குடியேறிய அனைத்து ஆண்களையும் அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 51 இந்திய பிரஜைகள், பாகிஸ்தானியர் (11), மியான்மாரீஸ் (மூன்று), பங்களாதேசிகள் (இரண்டு)  நேப்பாளத்தைச் சேர்ந்த ஒருவர் என 68 பேரை. 26, தாமான் டெக்னோலாஜியில் குடி உள்ள குடியிருப்பில் தங்க வைத்தார்.

குடிநுழைவுச் சட்டம் 1959/63 இன், பிரிவு 55 இ (1) இன் கீழ் பதிவான் இக்குற்றச்சாட்டில் அதிகபட்சமாக 30,000 வெள்ளி அபராதம் அல்லது 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே வகைசெய்கிறது. வளாகத்தில் காணப்படும் ஒவ்வொரு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரருக்கும்  அபராதம், சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

​​நிறுவனருக்கு எதிராக வழக்குரைஞர் நூராட்டிகா அமான் வழக்குத் தொடர்ந்தார், வழக்கறிஞர் ஜாஃப்லீ பக்வந்தே சியூவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version