யுவராணி கண்ணன் (வயது 26) என்பவரை பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போதைப் பொருள், குற்றப் பிரிவு புலனாய்வு துறை போலீசார் தேடி வருகின்றனர் என்று இன்ஸ்பெக்டர் வான் ஃபாராஹிடா பின்தி வான் முகமட் சாலே கூறினார்.
நம்பர் 15, லோரோங் 5/எஸ்எஸ்1 பாண்டார் தசேக் முத்தியாரா, 14120 சிம்பாங் அம்பாட், பினாங்கு என்பது யுவராணியின் இறுதி முகவரியாகும்.
இவர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் அல்லது நேரில் காண்பவர்கள் இன்ஸ்பெக்டர் கைருல் பின் ஸைனால் அபிடின் என்பவரை 017-6243870 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம். அல்லது கோலாலம்பூர் காவல் துறையினரை 03-21159999 என்ற எண்ணில் தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.