Home மலேசியா பங்சார் வட்டாரத்தில் ஏற்பட்ட விபத்து: தீயணைப்பு படையினர் இருவரை மீட்டனர்

பங்சார் வட்டாரத்தில் ஏற்பட்ட விபத்து: தீயணைப்பு படையினர் இருவரை மீட்டனர்

கோலாலம்பூர்:   பங்சாரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மீட்டது. மூத்த தீயணைப்பு அதிகாரி II சல்மி அப்துல் முக்தி, திங்கள்கிழமை (ஜூலை 13) அதிகாலை 1.20 மணியளவில் ஜாலான் தெலாவி 5 இல் ஒரு கட்டிடத்தில் மோதிய கார் சம்பவம் குறித்து தங்களுக்கு அழைப்பு வந்தது.

“ஒரு உள்ளூர் நபர் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது, அதே நேரத்தில் அவருடன் ஒரு வெளிநாட்டு பெண் இருந்ததாகவும் அவரது கால்களில் காயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத்  தொடர்பு உதவி தலைவர்  சுல்கிப்ளி யஹ்யாவைத் தொடர்பு கொண்டபோது கட்டிட உரிமையாளர் தனது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக புகார் அளித்துள்ளார். தனது கட்டிடத்தில் யாரோ விபத்துக்குள்ளானதாக அவர் சந்தேகித்தார், ஆனால் வாகனத்தின் பதிவு எண் குறித்து உறுதியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து காரின் உரிமையாளர் இன்னும் புகார் அளிக்கவில்லை என்று அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version