Home உலகம் நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு- 60 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களில் மட்டும் ஏராளமான இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சேறும், சகதியும் சரிந்து வீடுகள் மீது விழுந்ததில் பலர் உயிரிரோடு புதைந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 60 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 41 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மழையால் மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் நிலச்சரிவுகளில் சிக்கி 27  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version