Home மலேசியா சமூக ஊடகங்களில் மலேசியர்கள் திவிரமா?

சமூக ஊடகங்களில் மலேசியர்கள் திவிரமா?

உலகின் மிக ஒழுக்க ரீதியாக பழமைவாத நாடுகளில் மலேசியா இருக்கிறது என்று  பியூ ஆராய்ச்சி மையம் வகைப்படுத்துகிறது .ஆனால், அது ஒரு தவறானதாகக் கருதப்படுகிறது.

உண்மையில், மலேசியர்கள் சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாகச்செயல்படுகின்றவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த தீவிரம் பெரும்பாலும் கேவலமான கருத்துகளை வெளிப்படுகிறது என்று பெண்கள் மாற்றத்திற்கான மையம் (WCC) தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப மறுஆய்வுத் தளமான காம்பி டெக். காம் – இன் 2018 ஆம் ஆண்டு ஆராய்ச்சியில், சைபர்-கொடுமைப்படுத்துதலை அளவிடுவதற்கான ஓர் ஆய்வில் மலேசியா 28 நாடுகளில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. இது ஆசியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சைபர் துன்புறுத்தல் வழக்குகள் பெரும்பாலும் அறிக்கையிடப்படாமல் போவதாக டபள்யூசிசி கூறியது.

உளவியலாளர் டாக்டர் ஃபவுசியா முகமட் சாட் கருத்துப்படி, பலர் இதை பெரிய விஷயமல்ல என்று கருதுதுவதாகப் போலீசார் கூறுகின்றனர்.

இணையத்தில் தீங்கிழைக்கும் உள்ளடக்கம், மற்றொரு நபரை எரிச்சலூட்டும், தூண்டும், துஷ்பிரயோகம் செய்யும், அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் நோக்கமெனில் தகவல் தொடர்பு, பல்லூடகச்சட்டம்  1998 இன் கீழ் ஒரு குற்றமாகும்.

பிரிவு 233 (1) இன் கீழ், மற்றொரு நபரை தொந்தரவு, துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் அல்லது துன்புறுத்துவதற்கு ஆபாசமான, அநாகரீகமான, தவறான, அச்சுறுத்தும் அல்லது புண்படுத்தும் கருத்துகள் அல்லது பிற வகையான தொடர்புகளை உருவாக்குவது அல்லது கோருவது ஒரு குற்றமாகும்.

அத்தகைய குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஒரு நபருக்கு வெ. 50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கப்படலாம், அல்லது இரண்டும் விதிக்க சட்டம் வகைசெய்கிறது.

ஆன்லைனில் துன்புறுத்தப்பட்டவர்கள் அதை போலீசில் புகார் செய்து, மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கு எழுத வேண்டும் என்று டபள்யூசிசி திட்ட இயக்குநர் கரேன் லாய் தி தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்டவர் அவர்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல் செயல்படுவது முக்கியம்  என்று அவர் கூறினார்.

இணைய வன்முறை தனிப்பட்ட முறையில் நடக்கிறது என்றும், ஆன்லைனில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான  பாதிக்கப்பட்டவர்கள் பேச வேண்டும் என்றும் லாய் சுட்டிக்காட்டினார்.

இல்லையெனில் குற்றவாளிகள் தங்கள் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்றே நினைப்பார்கள்.

ஆன்லைனில் இருப்பது ஒரு நபருக்கு பொருத்தமற்ற கருத்துகள் அல்லது கருத்துக்களை தெரிவிக்கும் உரிமையை வழங்காது என்றும் அவர் கூறினார்.

Previous articleகத்தோலிக்க கல்லறைகளில் சூரையாடல்
Next articleKes Conteng: MBSA Padam Keseluruhan Mural Wajah-Wajah Pemimpin Negara

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version